Monday, March 31, 2014

செல்லப்பாவின் கேள்விகளுக்கு பதில்கள்
                      (ஆதாரத்துடன்)


செல்லப்பாவின் குற்றச்சாட்டு :
தோழர் மதிவாணன் Forum அமைப்புக்கு எதிரி ! 

டெல்லியில் Forum சார்பாக நடந்த கூட்டத்தில் NFTE-BSNL சார்பாக உரையாற்றுகிறார் தோழர் சி.கே.மதிவாணன். அவர் Forumக்கு எதிரி என்று எழுதியுள்ள செல்லப்பா இதே கூட்டத்தில் கலந்து கொண்டார். இதுவே அவரின் பொய் பிரச்சாரத்தை அம்பலமாக்குகிறது.  


செல்லப்பாவின் குற்றச்சாட்டு :
மதிவாணன் கமிஷன் பெறவே அடுக்கு மாடி திட்டத்தை உருவாக்கினார். 

அன்றிலிருந்து  இன்றுவரை தொடர்ந்து அநியாயத்தை எதிர்த்து போராடி வருபவர் தோழர் மதிவாணன். அவர் ஊழலுக்கு ஒத்துப்போவார் என்று சொன்னால், அதை சொல்பவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்று 
கேட்பவர் மனதில் நினைத்துக் கொள்வார்.  


 செல்லப்பாவின்கேள்வி : 
தமிழ் மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களுடன் அவர் ஒரே மேடையில் பேசாமல் இருப்பது ஏன் ? 

                      இந்த  படங்களே அதற்கு பதில்.

















                        இரட்டைக்குழல் துப்பாக்கியாய்......


 நமது கூட்டுறவு  சங்கத்தை BSNLEU சங்கத்தின் கைப்பாவையாய் மாற்ற பகல் கனவு காணும் செல்லப்பாவின் முயற்சியை சென்னை 
தொலைபேசி மற்றும் தமிழ் மாநில  NFTE,  FNTO SEWA BSNL, அண்ணா யூனியன் தோழர்கள்  இரட்டை குழல் துப்பாக்கியாய் இருந்து       
    முறியடிப்பார்கள் என்பது திண்ணம்.    







அந்தோ பரிதாபம் மதிவாணன் என்று தலைப்பிட்டு  BSNLEU சென்னை மாநிலச் செயலர் கோவிந்தராஜனும், தமிழ் மாநிலச் செயலர் செல்லப்பாவும் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.  

அதில் மதிவாணன் அவர்களின் செயல்தன்மை பற்றி தவறாக சித்தரித்து உள்ளனர்.

  யார் தவறு செய்தாலும் தைரியமாக எடுத்துச் சொல்லும் குணம் படைத்தவர்தான் தோழர் மதிவாணன் என்பது யாவரும் அறிந்தே......

ஆனால் செல்லப்பா கம்பெனியின் பாரம்பரிய வழக்கம் என்ன ?

மதிப்புவாய்ந்த  நமது தலைவர்களை கீழ்க்கண்டவாறு தரக்குறைவாக எழுதிய செல்லப்பாவிற்கு  தரம் பற்றி பேசும் தகுதி உண்டா ?  

  
  அருமைத் தோழர் குப்தா அவர்களை  "அரசின் ஆசைநாயகன் " என்று தொலைத் தொடர்பு தோழன் இதழில் எழுதிய செல்லப்பாவின் முகவிலாசம் என்ன ?

  1995ல் அர்ச்சனா டெலிகாம் கம்பெனியிடம் அருமைத் தோழர் குப்தா 
 " சூட் கேஸ் வாங்கினார் " என்று நாக்கூசாமல் பேசியவர்தானே 
இந்த செல்லப்பா ?

உத்தமத் தலைவர் ஜெகன் அவர்களை BlackBelt ஜெகன்னாதன்  என்று வர்ணித்து நோட்டிஸ் போட்ட செல்லப்பாவிற்கு தோழர் மதி அவர்களைப் பற்றி எழுத அருகதை உண்டா ?

லைன் ஸ்டாப் சங்க அகில இந்திய பொதுச் செயலர் தோழர் சந்திரசேகர் காலமானவுடன் அந்த பொறுப்புக்கு தோழர் ஜெகன் தேர்ந்தெடுக்கப்
ப ட்டார்  .  அதை  தனது தொலைத் தொடர்பு தோழனில் கிண்டலாக , ஒரு இளைஞர் அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர் பார்த்தோம் ! கிடப்பதெல்லாம கிடக்கட்டும் கிழவியை கொண்டு வந்து மணையில் வை என்பது போல  வயதானவரை 2000த்தில் சிலிகுரியில் நடந்த செயற்குழுவில் பொதுச் செயலர் ஆக்கிவிட்டார்கள் என்று எழுதி, தோழர் ஜெகன் அவர்களை அவமதித்த செல்லப்பாவின் தரம் நாம் நன்கு அறிந்ததே ! 

ஆலவட்டம் போட்ட குன்னூர் அதிகார வர்க்கத்தை எதிர்த்து போர்ப்பரணி பாடிய தோழர் ஆர்.கே அவர்களை அட்டைக் கத்தி ஆர்.கே என்று எழுதியவர்தானே இந்த செல்லப்பா ?

 78.2 DA பற்றி உடன்பாடு போட்ட முதல் நாளன்று இரவு, நமது சங்கத் தலைவர் தோழர் இஸ்லாம் நிர்வாகத்திற்கு விலை போய்விட்டார் என்று நாடெங்கும் கிசுகிசுப் பிரச்சாரம் செய்ததுதானே செல்லப்பா வகையறா ! 

  ஆம் ஆத்மீ கெஜ்ரேவாலின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட BJP, அவரை தாக்குவது போல உள்ளது, நாடு போற்றும்  Whistleblower மதிவாணன் அவர்களின் துணிச்சலான செயல்பாட்டால் அஞ்சி நடுங்கும்  செல்லப்பா கோவிந்த ராஜன்  கம்பெனியின் , ஊழல் நடந்து விடும் என்ற குடுகுப்பைக் காரன்  துர்பிரச்சாரம். 

அப்படி பார்த்தால் எந்த பெரிய Projectஐயும் செய்ய முடியாதே ? அதை கண்காணிக்க அனைத்து மாநிலச் செயலர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்த பின்னும் அதை ஏற்க மறுப்பது ஏன் ?


                         " Make Impossible Possible"
                                                          -Our legendary Leader O.P.Gupta 

 கார்ப்பரேஷன் ஆனால் அரசு பென்சன் கிடைகாது என்று பிரச்சாரம் செய்தது செல்லப்பா வகையறா. 

சாத்தியமில்லை என்பதை சாத்தியமாக்குவதுதான்  நமது பணி என்று சூழுரைத்து அதை சாதித்துக் காட்டியவர் பெருந்தகை O.P குப்தா . 


இன்று குப்தா பெற்றுக்கொடுத்த அதே அரசு பென்சனை அபிமன்யு, நம்பூதிரி, ராமன் குட்டி, D. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அனுபவித்து வருவது போல, அடுக்கு மாடி கட்டிய பின் இதே செல்லப்பாவும் கோவிந்தராஜனும் எங்களுக்கும் ஒரு Flatஐ ஒதுக்கி தாருங்கள் என்று கேட்கப் போவது உறுதி. 


மோடியும் மன்மோகனும் நாணயத்தின் இருபக்கங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கருத்து

புது டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையை வெளியிடும் (இடமிருந்து) பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் ஏ.பி. பரதன், டி.ராஜா.| படம்: சங்கர் சக்ரவர்த்தி.
நரேந்திர மோடியும் மன்மோகன் சிங்கும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாஜக வையும் புறக்கணித்துவிட்டு மாற்று அணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கையை வியாழக் கிழமை வெளியிட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் ஏ.பி. பரதன், குருதாஸ் தாஸ் குப்தா, டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய தாராளமயக் கொள்கை களை தொடர்ந்து பின்பற்றி வருவதால், நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்து வருகி ன்றன. முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஊக்கு விக்கும் செயலில் காங்கிரஸும் பாஜகவும் ஈடுபடுகின்றன. மக்களின் பிரச்சினைகளை நாடாளு மன்றத்தில் எடுத்துச் சொல்ல இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த வர்களை அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்பு, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது: “தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகளின் அணிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருப்பது அழிவைத் தரும் தாராளமயக் கொள்கைகளை தொடர்ந்து ஆதரித்து வருவதா அல்லது மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக் கான பலன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் கொள்கைகளை பின்பற்றுவதா என்பதுதான். மக்கள் சந்தித்து வரும் சமூக பொருளாதார அடிப்படை பிரச்சினைகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளு மன்றத்தில் எழுப்பினால், அது தொடர்பாக அர்த்தமுள்ள விவாதம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸும் பாஜகவும் நடந்து கொள்கின்றன. தனியார்மயமாக்குவதை இந்த இரு கட்சிகளும் இணைந்து ஊக்குவிக்கின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியின் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும், தங்களுக்குச் சாதகமாக ஒத்துழைப்பு தரக்கூடிய நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை விரும்புகின்றன.
குஜராத்தில் விவசாயிகளி டமிருந்து நிலம் பறிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இதன் காரணமாக விளைச்சல் குறைந்துவிட்டது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மக்கள் அவதிப் படுகின்றனர். அந்த மாநிலத்தில் மோடி தலைமையிலான அரசு, பெரும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது” என்றார் சுதாகர் ரெட்டி.
தேர்தலுக்குப் பிறகு பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் இடதுசாரிகள் உள்ளிட்ட மூன்றாவது அணி ஆட்சி அமைக்குமா என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி. பரதனிடம் கேட்டபோது, “தேர்தலுக்குப் பிறகு அது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம். தேவைப்பட்டால் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆதரிக்காத கட்சிகளுடன் இணைந்து செயல் படுவோம். இந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், “அரசு, தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கும், தனியார் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை தனியார் நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும்” என்றார்.

Saturday, March 29, 2014

New Organization for Contract Labours in Telecom Sector:
 National Federation of Telecom Contract Labours (NFTCL), a new
organization was already launched as per the guidance of the Central leadership of
AITUC. This organization is unique as it is the only organization which covers all
the contract labours in Telecom sector both private and public.
 The NFTCL’s first state conference of Tamil Nadu was held on 23/02/2014
and Kerala state conference is scheduled in the last week of April at Earnakulam.
In Maharastra and Bengal states already efforts have begun to hold the respective
state conferences. In July 2014 a National seminar on “The Working condition of
Contract Labours in Telecom sector” will be held at Chennai. In Punjab and
Karnataka states also comrades are planning to form NFTCL soon.
 At a recent meeting in Cuddalore (Tamil Nadu) Com. M.Appadurai, Ex MP
and Vice-President of AITUC introduced the New flag of the NFTCL in his
capacity as the president of the NFTCL Tamil Nadu state unit. The most exploited
section of workers to day in Telecom sector are our Contract labours. As per the
data released nearly 60 percentage of Telecom workforce is on contract only. The
system of contract labours is too high in our sector. Few organizations which at
present exist for the contract labours in BSNL only cover the BSNL contract
labours. But NFTCL covers all the contract labours who are working in both
private and public Telecom companies. It is the duty of every one of us to
strengthen and help this organization to grow leaps and bounds throughout the
country.
Com.  C.K.Mathivanan

Dated :27-03-2014

Friday, March 28, 2014

27-03-2014 அன்று நடைபெற்ற RGB உறுப்பினர்கள் தேர்தல்களில் NFTE அணி அமோக வெற்றி.

   நேற்று (27-3-14 அன்று) நடைபெற்ற RGB உறுப்பினர்கள் தேர்தல்களில்
தஞ்சாவூர், கும்பகோணம், வேலூர், சேலம், தர்மபுரி பகுதிகளில்
NFTE அணி அமோக வெற்றி.

வெற்றியை துவக்கிவைத்த நமது மாவட்ட சங்கங்களுக்கு நன்றி,

இனியும் தொடரும் நமது வெற்றி பாதை...

அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் C.K. மதிவாணன் அவர்களின் உரையிலிருந்து...

24-3-14 அன்று கடலூரில் நடைபெற்ற NFTCL மாநிலசங்க நிர்வாகிகளுக்கு நடைபெற்ற
பாராட்டுவிழாவில்  தோழர் C.K.மதிவாணன், துணைப்பொதுச்செயலர் அவர்கள் ஆற்றிய
 உரையிலிருந்து ...

கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் NFTE சங்க தோழர்களை
தோற்கடிக்க வேண்டும் என்று BSNLEU சங்கம் கடுமையாக முயற்சித்துவருகிறது.
அது தனது தொலைதொடர்பு தோழன் இதழிலும், சுற்றறிக்கையிலும் BSNLEU சங்கத்திற்கு
வாக்களித்தால்தான், சொஸைட்டியில் ஊழல் நடக்காது என்று பொய்பிரச்சாரம்
நடத்திவருகிறது. பன்மாநில கூட்டுறவு சொஸட்டி  2002 -ம் ஆண்டு விதிகளுக்கு மாறாக, உறுப்பினர்களுக்கு
ரூ 40 ஆயிரம் பிரித்தளிப்போம் என் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆகையால்
தமிழக NFTE  சங்க தோழர்கள் ஒன்றுபட்டு, BSNLEU சங்கத்தின் துரோக பிரச்சாரத்தை முறியடித்து,
கூட்டுறவு சங்கத்தை ஒரு கட்சியில் கட்டுப்பாட்டில் போகக்கூடாது என பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால் நமது சங்கத்தினை தோற்கடிக்க நினைக்கும் BSNLEU சங்கத்துடன், ஸ்ரீதரன், மாவட்டசெயலர்
தலைமையில்
கடலூரிலும், தமிழ் மாநில சங்க நிர்வாகி தோழர் மனோகரன்
தலைமையில் திருச்சியிலும் BSNLEU சங்கத்துடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இது இயற்கைக்கு மாறான வினோதமாக உள்ளது. NFTE சங்கத்தோழர்கள் அனைவரும் ஒன்று பட்டு
நின்றாலே அனைத்து RGB உறுப்பினர்களும் சுலபமாக வெற்றியை அள்ள முடியும். இந்த பொன்னான
வாய்ப்பை நிராகரித்துவிட்டு, தேவையின்றி BSNLEU சங்கத்திற்கு சிலRGB பதவிகளை விட்டுகொடுத்தது,
நியாயமானது அல்ல, ஆகவே தோழர்கள் ஸ்ரீதரன், மனோகரன் போன்றோர் தங்களது NFTE  சங்கத்தை
பிளவு படுத்தும் போக்கை கைவிட்டு ஒன்று படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும்,

88 ஏக்கர் நிலத்தை BSNLEU சொல்வதுபோல வீட்டுமனைகளாக பிரித்து கொடுப்பதாக இருந்தால்கூட
சுமார் 1936 பேருக்கு மட்டுமே!!! 1/2  கிரவுண்டு நிலம் என்ற வகையில் மனைகள் கிடைக்கும்.1936 பேருக்கு கிடைக்கும் மனையின் லாபத்தில், சுமார் 20 ஆயிரம் பேருக்கு, தலா 40 ஆயிரம் ரூபாய்
எப்படி தர முடியும்.

 ஆக மொத்த ரூ 80 கோடி லாபம், மற்றும் நிலத்தின் விலை ரூ 20 கோடி என சேர்த்து
பார்த்தால் ரூ 100 கோடி நிலத்தின் விலையாக வருகிறது.

இந்த விலையை,

நிலத்தை வாங்கபோகும் 1936 பேரின் தலையில் சுமத்தினால், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை எத்தனை லட்சங்கள் என கணக்கிடுங்கள், என்ன தலை சுற்றுகிறதா...

எனவே,

ஊழியர்களை மோசடி செய்து ஏமாற்றி அங்கீகார தேர்தலில் வெற்றி பெறுவதைப்போல, கூட்டுறவு
சொஸைட்டியிலும் வெற்றி பெறலாம் என BSNLEU கூட்டணி கனவு காண்கிறது.  இது பகல் கனவாகவே
முடியும்.

அனேகமாக, இவர்கள் சொல்லும் விலையை கேட்டு, 1/2 கிரவுண்டு மனைக்கு பதிலாக ரூ 40 ஆயிரம்
போதுமென்று உறுப்பினர்கள் பதறி ஓடுவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்த ஏமாற்று காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Friday, March 21, 2014

அனைவரும் வருக! ஆர்ப்பரித்து வருக!!

  

FELICITATION TO NEWLY ELECTED STATE OFFICE BEARERS OF NFTCL:

 There will be felicitation function for the newly elected state office bearers of NFTECL at Cuddalore on 24/03/2014 evening. All are requested to mobilize the contract labours for this function in which Com. Mali of Erode who is the working president of state body will introduce the flag of NFTCL and the flag hoisting will be done by Com. M. Appadurai Ex MP and state vice president of AITUC. Com C.K.Mathivanan Dy GS and Com. G.Jayaraman, Secretary(CHQ) will address.

Thursday, March 20, 2014

SOCIETY NEWS

Personal Loan

நமது தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் சாதாரண கடன் இதுவரை அடிப்படை சம்பளம் + 50% கிராக்கிபடி 20 மடங்கு இருந்தது.
இது இனிமேல் அடிப்படை சம்பளம்+ 90% கிராக்கிப்படி 20 மடங்கு என பெறலாம்.
அடிப்படை சம்பளம் ரூ.13,260/- அதற்குமேல் அடிப்படைச் சம்பளம் இருப்பவர்கள் புதிதாக வழங்கப்படும் கூடுதலாக 1 லட்சம் கடன் பெறமுடியும்.